Pages

Tuesday 6 January 2015

வக்கிரங்களை வாரியெடுத்து 
சாகசக்காற வெளியில் 
நீதியின் சாம்பல் மேடுகளில் 
பூத்துத் திளைக்கும் உலகே..!

காற்று ரணமாய்க் கிழிக்கையில் 
எடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம் 
மெலிந்த சிறகுகளில் சுமந்திருக்கும் 
பறவைகளின் கதையை 
எந்தக்காலத்தின் அறைகளுக்குள் 
ஒளித்து வைக்கப்போகிறாய் ...?

சாக்காட்டுத் தேசங்களிலிருந்து  
துயர் கசியும் பறவைகளின் பாடலை 
யாரேனும் உணர்ந்ததாய் தெரியவில்லை,
அன்பின் பாடல்களைக்கேட்டறியா 
செவிட்டு மனிதர்களுக்கிடையில்
ஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...

எம் நிழல்களில் உழல்வனவோ 
விடுதலையை தொலைத்த 
வெம்மையின் எச்சங்களாயிருக்கையில்,  
அழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க 
வெயில் நதியில் மிதக்கும் 
கைவிடப்பட்ட தேசங்களின் மனிதர்களிற்காக 
ஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..?  

தீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்
எம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது 
பொருளற்ற இருட்பாடல்களை பின்னிக்கொண்டு 
அதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..

எங்கள் கூடுகள் பற்றியும் 
கூரிய சொண்டுகள் கவ்விய 
எம் குஞ்சுகள் பற்றியும் 
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை.. 
கிளையில்லை, 
ஆகாயமில்லை, 
ஒரு கூண்டு கூட இல்லை.. 
எம் பழைய முகங்கள் எதிலும் இல்லை, 
குருதி தோய்த்து வரைந்தவை எல்லாம்  
பட்டுப்போன வனமொன்றில்...

தேய்ந்தழியக் காத்திருக்கும் 
நோய் கொண்ட வரலாற்றுடன் 
காலங்காலமாய் கடந்துவந்த வாழ்வின்
அடையாளங்கள் எதுவுமின்றி
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
தொலைந்துதான் போவோமோ..?

வலி சுமக்கும் பறவைகளே..!  
உலகத்தில் எமதிருப்பையும் உரைப்பதற்காய் 
தனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்
எல்லாம் கடந்து விட்டன..  
காற்றிப்போ எம் பக்கம் இல்லை, 
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி 
கடன் வாங்கி நாமும் அழவேண்டும்.. 

திரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின் 
முகத்தில் மோதிய இயலாமை...
மிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்...  
குருதியின் சுவை கொண்ட கண்ணீர் ... 
வெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...
கனவுகளைப் புசித்துப் பெருகும்  இருள்...
காலியான தேநீர்க்கோப்பையிலிருந்து வரும் 
இறந்த காலத்தின்  வாசனை.. 
ஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்
ஏக்கங்களுடன் அடைபடும் வாழ்க்கை...

என 

அகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில் 
ஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு 
இந்த உலகம் மிகத் தனிமையானதுதான்...  
    
ஒ வலி சுமக்கும் 
எம் பிரிய பறவைகளே..!   
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி 
கடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..

















வக்கிரங்களை வாரியெடுத்து
சாகசக்காற வெளியில்
நீதியின் சாம்பல் மேடுகளில்
பூத்துத் திளைக்கும் உலகே..!
காற்று ரணமாய்க் கிழிக்கையில்
எடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம்
மெலிந்த சிறகுகளில் சுமந்திருக்கும்
பறவைகளின் கதையை
எந்தக்காலத்தின் அறைகளுக்குள்
ஒளித்து வைக்கப்போகிறாய் ...?
சாக்காட்டுத் தேசங்களிலிருந்து
துயர் கசியும் பறவைகளின் பாடலை
யாரேனும் உணர்ந்ததாய் தெரியவில்லை,
அன்பின் பாடல்களைக்கேட்டறியா
செவிட்டு மனிதர்களுக்கிடையில்
ஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...
எம் நிழல்களில் உழல்வனவோ
விடுதலையை தொலைத்த
வெம்மையின் எச்சங்களாயிருக்கையில்,
அழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க
வெயில் நதியில் மிதக்கும்
கைவிடப்பட்ட தேசங்களின் மனிதர்களிற்காக
ஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..?
தீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்
எம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது
பொருளற்ற இருட்பாடல்களை பின்னிக்கொண்டு
அதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..
எங்கள் கூடுகள் பற்றியும்
கூரிய சொண்டுகள் கவ்விய
எம் குஞ்சுகள் பற்றியும்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை..
கிளையில்லை,
ஆகாயமில்லை,
ஒரு கூண்டு கூட இல்லை..
எம் பழைய முகங்கள் எதிலும் இல்லை,
குருதி தோய்த்து வரைந்தவை எல்லாம்
பட்டுப்போன வனமொன்றில்...
தேய்ந்தழியக் காத்திருக்கும்
நோய் கொண்ட வரலாற்றுடன்
காலங்காலமாய் கடந்துவந்த வாழ்வின்
அடையாளங்கள் எதுவுமின்றி
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
தொலைந்துதான் போவோமோ..?
வலி சுமக்கும் பறவைகளே..!
உலகத்தில் எமதிருப்பையும் உரைப்பதற்காய்
தனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்
எல்லாம் கடந்து விட்டன..
காற்றிப்போ எம் பக்கம் இல்லை,
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி நாமும் அழவேண்டும்..
திரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின்
முகத்தில் மோதிய இயலாமை...
மிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்...
குருதியின் சுவை கொண்ட கண்ணீர் ...
வெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...
கனவுகளைப் புசித்துப் பெருகும் இருள்...
காலியான தேநீர்க்கோப்பையிலிருந்து வரும்
இறந்த காலத்தின் வாசனை..
ஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்
ஏக்கங்களுடன் அடைபடும் வாழ்க்கை...
என
அகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில்
ஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு
இந்த உலகம் மிகத் தனிமையானதுதான்...
ஒ வலி சுமக்கும்
எம் பிரிய பறவைகளே..!
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..

No comments:

Post a Comment