Pages

Wednesday 2 March 2011

காதலின் வலி...

நீளமான மெளனங்கள்.............
நீ பேசியதை விட - உன்
மெளனங்கள்......
பேசியவை ஏராளம்
வர்த்தைகளை விட
வலிமையானவை
மெளனங்கள் - என்பதை
உன்னைக்காதலித்த போது தெரிந்துகொண்டேன்
என்னுள் நானே பேசி.........
ஏகாந்ததில் சிரித்து...............
அர்த்தமற்ற சந்தோசம்
கொண்டாடுவதற்கு
நீயல்ல - உன்
காதல்தான் கற்றுத்தந்தது............
காதலியே!
உனக்காக காத்திருக்கிறேன்
கனவுகளை மட்டும் பரிசளித்து சென்றுவிட்டாய்
காலமெல்லாம், கண்ணீருடன் நான்
உன் வீட்டைக்கடக்கும் பொழுதெல்லாம்
இதயத்துள், ஒரு இதமான அவஸ்தை
உள்ளே நீ இல்லாவிட்டாலும் கூட
காதலின் அவஸ்தைகளை
புரியவைத்தவள் நீ
ஆனால்
உனக்கு மட்டும்
அது புரியாமல் போனது ஏனோ?


(காத்திருக்கும் காதலர்க்காக...)

காத்திருக்கும் இதயம்....

கனவுகள் பூத்த இரவுகள் எல்லாம் - உன்
நினைவுகளால் வேகுகின்றன
இதயம் துடிக்கும் ஓசைகள் எல்லாம் - எனக்கு மட்டும்
ஒப்பாரிச்சத்தங்களாகின்றன - உன்
நினைவு பூத்த வெம்மை நிலப்பரப்பாய்
என் உள்ளம் தகிக்கிறது
அசைவற்ற வெறு வெளியில்
நினைவற்ற ஜடம்போல - என்
மனவறையின் சுவர்களில்
வெறுமைகளே நிறைந்து கிடக்கின்றன
உன் நினைவு சுமந்த
என் இதயம்
கனத்துப்போன இரும்பாக
மரத்துப்போய்க்கிடக்கின்றது
என் பாலைவனத்தின் வெண்மணலில்
நீர் வார்க்கும் ஊற்றாக
நீ வரும் நாள்பார்த்து - உன்
நினைவுகள் சுமந்து - ஒற்றைக்கால்
தவமியற்றும் பற்றற்ற கொக்காக
உனக்காக
உனக்கேயாக - இன்னும்
உயிர் சுமக்கிறேன் - இந்த
உணர்வற்ற உடலில்....