Pages

Wednesday 2 March 2011

காத்திருக்கும் இதயம்....

கனவுகள் பூத்த இரவுகள் எல்லாம் - உன்
நினைவுகளால் வேகுகின்றன
இதயம் துடிக்கும் ஓசைகள் எல்லாம் - எனக்கு மட்டும்
ஒப்பாரிச்சத்தங்களாகின்றன - உன்
நினைவு பூத்த வெம்மை நிலப்பரப்பாய்
என் உள்ளம் தகிக்கிறது
அசைவற்ற வெறு வெளியில்
நினைவற்ற ஜடம்போல - என்
மனவறையின் சுவர்களில்
வெறுமைகளே நிறைந்து கிடக்கின்றன
உன் நினைவு சுமந்த
என் இதயம்
கனத்துப்போன இரும்பாக
மரத்துப்போய்க்கிடக்கின்றது
என் பாலைவனத்தின் வெண்மணலில்
நீர் வார்க்கும் ஊற்றாக
நீ வரும் நாள்பார்த்து - உன்
நினைவுகள் சுமந்து - ஒற்றைக்கால்
தவமியற்றும் பற்றற்ற கொக்காக
உனக்காக
உனக்கேயாக - இன்னும்
உயிர் சுமக்கிறேன் - இந்த
உணர்வற்ற உடலில்....

No comments:

Post a Comment