Pages

Wednesday 2 March 2011

காதலின் வலி...

நீளமான மெளனங்கள்.............
நீ பேசியதை விட - உன்
மெளனங்கள்......
பேசியவை ஏராளம்
வர்த்தைகளை விட
வலிமையானவை
மெளனங்கள் - என்பதை
உன்னைக்காதலித்த போது தெரிந்துகொண்டேன்
என்னுள் நானே பேசி.........
ஏகாந்ததில் சிரித்து...............
அர்த்தமற்ற சந்தோசம்
கொண்டாடுவதற்கு
நீயல்ல - உன்
காதல்தான் கற்றுத்தந்தது............
காதலியே!
உனக்காக காத்திருக்கிறேன்
கனவுகளை மட்டும் பரிசளித்து சென்றுவிட்டாய்
காலமெல்லாம், கண்ணீருடன் நான்
உன் வீட்டைக்கடக்கும் பொழுதெல்லாம்
இதயத்துள், ஒரு இதமான அவஸ்தை
உள்ளே நீ இல்லாவிட்டாலும் கூட
காதலின் அவஸ்தைகளை
புரியவைத்தவள் நீ
ஆனால்
உனக்கு மட்டும்
அது புரியாமல் போனது ஏனோ?


(காத்திருக்கும் காதலர்க்காக...)

No comments:

Post a Comment