தீராநதி
தீராத என் தமிழ் நதி...
Pages
Home
Monday 6 June 2011
சருகானவர்கள்.....
எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி
ஒளித்தொகுப்பை நடத்திவிட்டு
காலங்கள் தொலைந்ததனால்
காய்ந்து சருகாவதற்காய்
வேர்களை நோக்கி
உதிர்ந்துவிழும் இலைகள்
நினைவு படுத்துகின்றன
பனிமர தேசத்தில்
பிடுங்கி நடப்பட்ட
ஈழத்துத் தமிழர்களை....
அந்நியன்....
பைன்மரத்தை தீண்டிவரும்
மாலைநேரக் குளிர்காற்றில்
மனதைப் பறிகொடுத்து
மயங்கி நின்றபோது
ஓடி வழிந்தோடி
ஒருகால்ப் பாதணியை ஊடுருவி
உள்ளங்காலூடு புகுந்து
உச்சி மண்டையில்
சுள்ளென்று உறைக்கும்படி-குளிரில்
சில்லென்று குத்திய
மழைத்துளி சொல்லியது
நான் அந்நியன் என்று....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)