பைன்மரத்தை தீண்டிவரும்
மாலைநேரக் குளிர்காற்றில்
மனதைப் பறிகொடுத்து
மயங்கி நின்றபோது
ஓடி வழிந்தோடி
ஒருகால்ப் பாதணியை ஊடுருவி
உள்ளங்காலூடு புகுந்து
உச்சி மண்டையில்
சுள்ளென்று உறைக்கும்படி-குளிரில்
சில்லென்று குத்திய
மழைத்துளி சொல்லியது
நான் அந்நியன் என்று....
No comments:
Post a Comment