Pages

Thursday 3 February 2011

தொலைந்த மனிதனை தேடிக்கொள்...

உன்னுடைய பாதைகளை 
நீயே அமைத்துக்கொள்
அடுத்தவன் பாதைகளில்
ஆசைப்படாதே..

உன்னுடைய சிலுவைகளை
நீயே சுமந்துகொள்
அடுத்தவன் தோளுக்கு
அதிகாரமிடாதே..

உன்னுடைய செடிகளை
நீயே வளர்த்துக்கொள்
அடுத்தவன் தோட்டத்தில்
பூக்களைப்பறிக்காதே..

உன்னுடைய குறைகளை
நீயே சொறிந்துகொள்
அடுத்தவன் குறைகளை சொறிய
நினைக்காதே..

உன்னுடைய மதத்தில்
உண்மைகளை தேடிச்செல்
அடுத்தவன் மதத்தில்
ஓட்டைகளைத்தேடாதே..

உன்னையே நீ தேடி
உண்மைகளைக்கண்டு
உன்னுள் தொலைந்த
மனிதனை மீட்டுக்கொள்

No comments:

Post a Comment