Pages

Friday 29 January 2016

மெளனம் ஒரு கடன் காறனைப்போல சொற்களை சேகரிக்க
கவிதைகளை உதிர்த்தபடி மஞ்சல் இலைகள் வீழ்கின்றன...
பூமி வீழ்ந்த பூக்களினால் மணக்கிறது..
கிளைகளில் முடிந்துபோன வசந்த காலங்களை
உதிர்ந்த இலைகள் உக்கிப்போன நரம்பிகளிலிருந்து ஒழுகும் மழைத்துளிகளில் ஒவ்வொன்றாய் மீட்ட
ஏகாந்த வனத்தில் யுகங்கள் அலைகின்றன...
நினைவுகளை விழுங்கியும் செரிக்கமுடியாமல்
விரைகிறது காலம் தன் வழியில்...
நீண்ட வானில் எவருமற்று இருளுக்குள் கரையும்
ஆட்காட்டிக் குருவியின் குரலைப் போன்று இத்தனிமை...
ஏந்திச் செல்லவியலாது அத்துனை சோகத்தையும்
கரைத்துவிடும் எத்தனத்துடன் பகலும் இரவும்...
தங்கிவிடுகின்ற தவிப்புடன் தேய்கிறது மாலைகள்...
மெளனக்குளத்தை பாசிபிடித்த நினைவுகள் காலிடறிக்கலைக்க
தரையுமின்றிக் கடலுமின்றி அலையும்
கடல்மணலில் புதையுன்ட படகுபோல்
மரணத்திற்கும் வாழ்தலிற்கும் இடையில்
துருப்பிடித்துக்கிடக்கிறது இலையுதிர் காலம்...
வாழ்வு ஓர் பனிமலையாய் கரைந்து தீர்கிறது...
எல்லோர்க்குமாய் ஒழுகும் வானத்தின் கீழ்
மழை இப்பொழுதெல்லாம் குழந்தைகளை மட்டுமே நனைப்பதாய்க் காண்கிறேன்...

No comments:

Post a Comment