Pages

Friday, 29 January 2016

காட்டுப்பூவாயினும்
தடவித் தடவி
தன் பிரியத்தை உரைக்கிறது
காற்று...

அணிலொன்றின் வருகையில்
மலர்கிறது மரம்..

துளித்துளியாய் பொழிகிறது
வானம்
காற்றுடன் கைகொட்டி ரசிக்கிறது
வனம்...

நிலவு அணைக்கிறது
நதிகள் பூமியை நனைக்கின்றன
மூங்கில்கள்
இன்னமும் இசைக்கின்றன..

யார் சொன்னார் அன்பற்றது
இவ்வுலகென்று.. <3

No comments:

Post a Comment