காட்டுப்பூவாயினும்
தடவித் தடவி
தன் பிரியத்தை உரைக்கிறது
காற்று...
அணிலொன்றின் வருகையில்
மலர்கிறது மரம்..
துளித்துளியாய் பொழிகிறது
வானம்
காற்றுடன் கைகொட்டி ரசிக்கிறது
வனம்...
நிலவு அணைக்கிறது
நதிகள் பூமியை நனைக்கின்றன
மூங்கில்கள்
இன்னமும் இசைக்கின்றன..
யார் சொன்னார் அன்பற்றது
இவ்வுலகென்று.. <3
No comments:
Post a Comment