Pages

Sunday 3 April 2011

துளிகள்..

பிரிவு

பூக்கள் உதிரும்போது
காம்புகள்
அநாதையாகின்றன...

ஒய்வு

ஒவ்வொரு இறகையும்
கோதிவிடுகையில்
உதிர்ந்து போகிறது
பறவையின் களைப்பு...

கவலை

துரத்தில் மைதானத்தில்
புள்ளி புள்ளியாய்
கால்பந்தாடும் சிறுவர்கள்
யன்னலோரம்
கவலைகளில்
இளமையைத்
தொலைத்துவிட்டு
நான்..

மதம்

எல்லா வீதிகளும்
தொலைந்து போகின்றன
நெடுஞ்சாலையில்...

மரணம்

ஒவ்வொரு மரணத்திலும்
முற்றுப்பெறுகிறது
காலம் எழுதிமுடித்த
ஏதோ ஒரு அத்தியாயம்..

முயற்ச்சி

மின்மினிகள்
போராடுகின்றன
இரவை எரித்துவிட..

மௌனம்

காற்றின் சலனங்களில்
கலைந்து போகிறது
மரங்களின் மௌனம்.. 

No comments:

Post a Comment