கனவுகளில்
காய்ந்த நிலத்தில்
விதைகளைதேடுகிறேன்
என் காதலை துளிர்ப்பதற்காய்..
மனவெளியெங்கும்
இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல
காய்ந்துகிடக்கிறது
கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்..
ஆவியாகி
இன்னமும் பொழிவதற்காய்
சிலிர்த்துக்கொண்டே இருக்கின்றன
ஒரு மாலைப்பொழுது
எமை நனைத்த மழைத்துளிகள்..
நாம்தான்
கரைபிரித்துக்கட்டப்பட்ட
துருவ நதிகளாக
திசை பிரிந்து...
எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத
சோகத்தில்
அழுதபடி கடந்துபோகிறது
ஒவ்வொரு இரவும் நிலவு..
இப்போதெல்லாம்
நாம்பேசிய வார்த்தைகளில்
சிதறிக்கிடக்கின்றன
அன்பைத்தொலைத்த
கண்ணீர்ப்பூக்கள்...
ஏன் மெளனம்
உன் கரைகளில்..?
உன்
எண்ணங்களை வனையத்தெரியா
வண்ணாத்திப்பூச்சி நீயோ..?
இல்லை
என் சோகங்கள் எழுதியகண்ணீர்த்துளிகள்
இன்னமும் உன் பூமியை சேரவில்லையோ..?
புரியவில்லை....
காதல் வெளியில்
பெய்யாத மழையில் நனைந்த
என் பாடலின் மீது நடந்து
எப்படி உன் நினைவுகள்
என்னுள்ளே நுழைகின்றன..?
காய்ந்த நிலத்தில்
புதைந்திருக்கும் காதலை
சுமந்தபடி
நிராகரிப்பின் ஒற்றைசாட்சியாய்
எப்படி
என் கனவுகள் மட்டும்
இன்னும் செழித்து வளர்ந்துகொண்டே இருகின்றன..?
மடியாத என் கனவுகளை கேட்டேன்..
முடியாத உன் என்றோ ஒரு இரவில
தொடங்கலாம் என் நினைவுகள்
நம்பிக்கைகள் கூச்சலிட்டன...!
காய்ந்த நிலத்தில்
விதைகளைதேடுகிறேன்
என் காதலை துளிர்ப்பதற்காய்..
மனவெளியெங்கும்
இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல
காய்ந்துகிடக்கிறது
கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்..
ஆவியாகி
இன்னமும் பொழிவதற்காய்
சிலிர்த்துக்கொண்டே இருக்கின்றன
ஒரு மாலைப்பொழுது
எமை நனைத்த மழைத்துளிகள்..
நாம்தான்
கரைபிரித்துக்கட்டப்பட்ட
துருவ நதிகளாக
திசை பிரிந்து...
எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத
சோகத்தில்
அழுதபடி கடந்துபோகிறது
ஒவ்வொரு இரவும் நிலவு..
இப்போதெல்லாம்
நாம்பேசிய வார்த்தைகளில்
சிதறிக்கிடக்கின்றன
அன்பைத்தொலைத்த
கண்ணீர்ப்பூக்கள்...
ஏன் மெளனம்
உன் கரைகளில்..?
உன்
எண்ணங்களை வனையத்தெரியா
வண்ணாத்திப்பூச்சி நீயோ..?
இல்லை
என் சோகங்கள் எழுதியகண்ணீர்த்துளிகள்
இன்னமும் உன் பூமியை சேரவில்லையோ..?
புரியவில்லை....
காதல் வெளியில்
பெய்யாத மழையில் நனைந்த
என் பாடலின் மீது நடந்து
எப்படி உன் நினைவுகள்
என்னுள்ளே நுழைகின்றன..?
காய்ந்த நிலத்தில்
புதைந்திருக்கும் காதலை
சுமந்தபடி
நிராகரிப்பின் ஒற்றைசாட்சியாய்
எப்படி
என் கனவுகள் மட்டும்
இன்னும் செழித்து வளர்ந்துகொண்டே இருகின்றன..?
மடியாத என் கனவுகளை கேட்டேன்..
முடியாத உன் என்றோ ஒரு இரவில
தொடங்கலாம் என் நினைவுகள்
நம்பிக்கைகள் கூச்சலிட்டன...!
1 comment:
எப்படி
என் கனவுகள் மட்டும்
இன்னும் செழித்து வளர்ந்துகொண்டே இருகின்றன..?
ஆழமான காதலால்
....கனவு நிலையற்றது நிஜத்துக்கு வந்து வாழுங்கள்.
Post a Comment