Pages

Thursday 2 February 2012

புரிந்துகொள்ளும் புரியாத மொழிகள்....

யார் சொன்னது
வழிந்தோடும் என் இளமைக்கால
நினைவுகளை மேய்ந்தபடிபோகும்
வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப்
புரிய முடியாதென்று...?

யார் சொன்னது
நான் தொலைத்துவிட்ட சிறுவன்
நடந்துதிரிந்த வீதிகளில்
எஞ்சியிருக்கும்
புறாக்களினதும் புலுனிகளினதும்
கவலைப் பாட்டினை
விளங்கமுடியாதென்று....?

யார் சொன்னது
வெட்டைக் காணிகளின்
சம்புப் புற்களுக்கிடையே
அங்கொன்றும் இங்கொன்றுமாகக்
குந்தியிருக்கும் தும்பிகளின்
இறக்கைகளில் இருந்துதொடங்கும்
என் பால்யகாலக் கவிதைகளைப்
படிக்க முடியாதென்று...?

அவைகளின் மொழிகள்
உனக்கெப்படித் தெரியுமென்ற
வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்...
அவைகளின் மொழிகளில்தான்
மீட்டிக்கொள்கிறேன்
கிழித்து வீசப்பட்டதால்
பொருளை இழந்துபோன
கவிதைபோலக்
காலம் கடந்துபோகக்
காலாவதியாகிக்கிடக்கும்
என் மழலைக்காலங்களை...

2 comments:

சசிகலா said...

பொருளை இழந்துபோன
கவிதைபோலக்

அருமை

நிலாமதி said...

கவிஞ்சனுக்கு எல்லா மொழியும் புரியும்..........

Post a Comment